குரூப் 1, குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு..? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு..!!




தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு நடைபெற்று 7 மாதங்களைக் கடந்தும் தேர்வு முடிவுகள் வெளியாகாததால், உடனடியாக முடிவுகளை அறிவிக்கக் கோரி சமூக வலைதளங்களில் தேர்வர்கள் டிரெண்ட் செய்தனர்.


இதனைத் தொடர்ந்து, இம்மாத இறுதிக்குள் முடிவுகள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருந்தது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி நடத்திய 14 தேர்வுகளின் முடிவுகள் வெளியாகும் மாதம் குறித்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


அதன்படி, குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதன்மை தேர்வு முடிவுகள் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியாகும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. மேலும், தலைமைச் செயலகத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ் செய்தியாளர் பணியிடத்திற்கான வாய்மொழி தேர்வுக்கான முடிவுகளும், ஜெயிலர் பணியிடத்திற்கான தேர்வு முடிவுகளும் வரும் ஏப்ரலில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog