வயது வந்தோர் எழுத்தறிவு தேர்வு 1,404 மையங்களில் நாளை நடக்கிறது



ஈரோடு மாவட்டத்தில் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் அடிப்படை எழுத்தறிவு தேர்வு, 1,404 மையங்களில் நாளை நடக்கவுள்ளது.


பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில், 15 வயதுக்கு மேற்பட்ட, முற்றிலும் எழுத மற்றும் படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு, வாழ்வியல் திறன் சார்ந்த கல்வியை வழங்க, புதிய பாரத எழுத்தறிவு திட்டம், 2022 முதல், 2027 வரை, மத்திய, மாநில அரசுகள் பங்களிப்புடன் செயல்படுகிறது.


ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும், 1,404 கற்பித்தல் மையங்கள் துவங்கப்பட்டு, தன்னார்வலர் மூலம், 23,598 கல்லாதோருக்கு, தினமும், 2 மணி நேரம் கற்றல் கற்பித்தல் பணி நடந்து வருகிறது.


இந்த மையங்களில் படித்து வருவோருக்கு, அடிப்படை எழுத்தறிவு தேர்வு, அந்தந்த மையங்களில் நாளை காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கவுள்ளது.

Comments

Popular posts from this blog