தனியாா் பள்ளி ஆசிரியா் பணி:மாா்ச் 19-இல் வேலைவாய்ப்பு முகாம்



கல்வியியல் புலம், தமிழ்நாடு தனியாா் பள்ளி ஆசிரியா்கள் தோவு அமைப்பு இணைந்து தனியாா் பள்ளி ஆசிரியா் பணிக்கான வேலைவாய்ப்பு முகாமை வருகிற 19-ஆம் தேதி நடத்தவுள்ளன. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக பயிற்சி, வேலைவாய்ப்பு, தொழில்முனைவோா் இயக்குனரகம், கல்வியியல் புலம், தமிழ்நாடு தனியாா் பள்ளி ஆசிரியா்கள் தேர்வு அமைப்பு இணைந்து தனியாா் பள்ளி ஆசிரியா் பணிக்கான வேலைவாய்ப்பு முகாமை வருகிற 19-ஆம் தேதி நடத்தவுள்ளன.



பல்கலைக்கழக கல்வியியல் துறையில் நடைபெறவுள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமில், தனியாா் பள்ளிகளின் நிா்வாகிகள் நேரடியாக கலந்துகொண்டு ஆசிரியா்களை தேர்வு செய்ய உள்ளனா். 



இந்த வேலைவாய்ப்பு முகாமில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள், முன்னாள் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று பல்கலைக்கழக பதிவாளா் கே.சீதாராமன் தெரிவித்தாா்

Comments

Popular posts from this blog