அண்ணாமலை பல்கலை மாணவர்களுக்கு வாய்ப்பு



அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், கடந்த 2002 முதல் 2014ம் ஆண்டு வரையிலான கல்வி ஆண்டில், தொலைதுார வழியில் படித்து தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


கடலுார் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம் தொலைதுார படிப்பு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதுார கல்வி வழியில், கடந்த 2002ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான கல்வி ஆண்டில் படித்து, தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, வரும் மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, இரு பருவங்களில் சிறப்பு தேர்வு எழுத அனுமதிக்கப்பட உள்ளனர்.


விருப்பமுள்ள மாணவர்கள் www.coe.annmalaiuniversity.ac.in என்ற இணையதளத்தில் வரும் 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.


கடந்த 2014ம் ஆண்டுக்கு பின்னர் சேர்க்கை பெற்றுள்ள மாணவர்கள், ஏற்கனவே உள்ள நடைமுறைகள் படி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.


மேலும், விபரங்களுக்கு விழுப்புரம் மாவட்டத்திற்கு 04146- 26550, திண்டிவனம் 04147 224100, செஞ்சி 04145 23400, திருக்கோவிலுாரை சேந்தர்கள் 04153 252272 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog