டிஎன்பிஎஸ்சி குரூப்-4, VAO காலிப்பணியிடங்கள் எத்தனை?.. வெளியான முக்கிய தகவல்..!!!!




தமிழகத்தில் சென்ற 2022 ஆம் வருடம் ஜூலை மாதம் 7,301 காலிப் பணியிடங்களை கொண்ட குரூப்-4 & VAO தேர்வு நடந்தது.


இத்தேர்வில் சுமார் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்த தேர்வின் முடிவுகள் 2022 அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும் தற்போது வரை குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதன் காரணமாக அதிருப்தியடைந்த தேர்வர்கள் விரைந்து தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


இதற்கிடையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் மார்ச் மாத இறுதிக்குள் குரூப் 4 & VAO தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இப்போது அதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளது. முடிவுகள் வெளியாகவுள்ள இந்நிலையில் TNPSC குரூப் 4 & VAO தேர்வின் கீழ் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையானது 7,301ல் இருந்து 9,870 ஆக அதிகரிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments

Popular posts from this blog