ரேசன் கடைகளில் 6,500 காலி பணியிடங்கள் | விரைவில் பணி ஆணை வழங்கப்படும்: அமைச்சர் பெரியகருப்பன்




: ரேசன் கடைகளில் காலியாக உள்ள 6,500 பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டு விரைவில் பணிஆணை வழங்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.


சென்னை, கொத்தவால்சாவடி, தாத்தா முத்தையப்பன் தெருவில் வ.உ. சிதம்பரனார் கூட்டுறவு பண்டகசாலையின் புதிய நியாயவிலைக் கடையினை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று (மார்ச் 17) தொடங்கி வைத்தார். 


பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர், "கூட்டுறவு நியாயவிலைக் கடையில் உள்ள 6,500 காலிபணியிடங்களை நிரப்புவதற்கு நேர்முகத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு தற்போது மதிப்பீடு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தகுதியுள்ள பணியாளர்களுக்கு விரைவில் பணி ஆணை வழங்கப்படும்" என தெரிவித்தார். 

Comments

Popular posts from this blog