பிளஸ் - 2 பொதுத்தேர்வு முடிவுகள் தள்ளிப்போக வாய்ப்பு... காரணம் இதுதான்?




தமிழ்நாட்டில் மே 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



தமிழ்நாட்டில் மார்ச் 13-ம் தேதி தொடங்கிய 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த 3-ம் தேதி நிறைவடைந்தன. இதற்கான தேர்வு முடிவுகள் மே 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளதால் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வேறு தேதிக்கு மாற்ற பள்ளிக் கல்வித் துறை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


நீட் தேர்வுக்கு முன்பாக தேர்வு முடிவுகள் வெளியானால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படக் கூடும் என்பதால், இரண்டு நாட்களுக்குப் பிறகு முடிவுகளை வெளியிட பள்ளிக் கல்வித்துறை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.


Comments

Popular posts from this blog