குரூப் 4 தேர்வில் மேலும் ஒரு சர்ச்சை..!! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட பட்டியலில் அம்பலம்..!!




தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வுகளின் முடிவுகள் சமீபத்தில் வெளியானது.


கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது. சுமார் 10,000 காலிப் பணியிடங்களுக்காக 18 லட்சம் பேர் இந்த தேர்வினை எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் மார்ச் 24ஆம் தேதியன்று வெளியானது. 


தற்பொழுது, குரூப் 4 தேர்வில் ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த சங்கரன்கோவில் பகுதியில் இருந்து தட்டச்சு பணியிடங்களுக்கு 450 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 2,500 ஸ்டெனோ டைப்பிஸ்ட் காலியிடங்களுக்கு தேர்ச்சி பெற்ற சுமார் 600 பேர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தோர் என்றும், அதில் சங்கரன்கோவிலில் மட்டும் 450 பேர் தேர்ச்சி பெற்றது எப்படி எனவும் கேள்வி எழுந்துள்ளது.


சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி உள்ளவர்களின் பட்டியலை நேற்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் தான் இந்த சர்ச்சை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 


இந்நிலையில் இதில், முறைகேடுகள் நடைபெற்றிருக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னதாக, தென்காசியை சேர்ந்த ஆகாஷ் பிரண்ட்ஸ் என்கிற தனியார் ஐஏஎஸ் அகாடமியில் (TAF) இருந்து மட்டும் 2000 பேர் தேர்வாகியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் குரூப் 4 தேர்வில் முதல் 11 இடங்களில் 6 இடங்களை ஒரே தேர்வு மையத்தில் படித்த மாணவர்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog