டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இன்று இலவச பயிற்சி.. ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாதெமி வெளியிட்ட அறிவிப்பு..!!!



ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாடமியில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1, குரூப் 2, குரூப் 4 மற்றும் விஏஓ உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.


இதனிடையே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வருகின்ற நவம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளது. அதில் சுமார் 10,000 மேற்பட்ட காலி பணியிடங்கள் இந்த தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் ஞாயிற்றுக்கிழமை அதாவது இன்று ஏப்ரல் 16ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.


இது மயிலாப்பூர் ராயப்பேட்டை பிரதான சாலை வி எம் தெருவில் உள்ள இந்திய இளைஞர் சங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களின் முழு முகவரியுடன் டைப் செய்து 9710375604 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலமாக அனுப்பி முன் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog