TNPSC Group 1 Results: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு



குரூப் 1 முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


5446 காலிப் பணியிடங்கள் கொண்ட குரூப் 2 மெயின் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்றும் குரூப் 8, குரூப் 7 பி தேர்வு முடிவுகளும் இம்மாதம் வெளியாகிறது என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.


டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலைத் தேர்வுகள், கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. 


இதேபோல், நிர்வாக அலுவலர், கிரேடு-IV உள்பட குரூப் 8 எழுத்துத் தேர்வு முடிவுகளும் இம்மாதம் வெளியிடப்படும் எனவும், நிர்வாக அலுவலர், கிரேடு-III குரூப் 7 பி எழுத்துத் தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


குரூப் 1 தேர்வுகள் மொத்தம் 95 இடங்களை நிரப்புவதற்கு நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு முதல்நிலைத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்தப் பிரிவில் தேர்வாக முதல்நிலை, பிரதான தேர்வு, Oral Test ஆகியவை நடத்தப்படும்.


குரூப் 2 பிரிவில் 5446 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் கடந்த ஆண்டு நடத்தப்பட்டன. இதில், பிரதான எழுத்துத் தேர்வுக்கான ரிசல்ட் இந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். குரூப்-1 பணியிடங்களுக்கு முதல்நிலை, பிரதான, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.


அதன்படி, குரூப் -1 முதல்நிலைத் தேர்வு குறித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டது. அதில், 18 துணை ஆட்சியர்கள், 26 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர்கள், 25 வணிகவரி உதவி ஆணையர்கள், 7 ஊரக மேம்பாடு உதவி இயக்குனர்கள், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் பதவிகள் என 95 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.


முதல்நிலைத் தேர்வுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்தது குறிப்பிடத்தக்கது.


குரூப் 7 பிரிவில் 77 காலிப் பணியிடங்களுக்கு 19.05.2022 அன்றும், குரூப் 8 பிரிவில் 74 காலிப் பணியிடங்களுக்கு 20.05.2022 அன்றும் அறிவிப்பு வெளியாகியிருந்தது.


குரூப் 2 காலிப் பணியிடங்களுக்கு 23.02.2022 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog