விழுப்புரத்தில் வரும் 19ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு






விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 19ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.


கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், மே மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 19ம் தேதி நடக்கிறது.


இம்முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று 500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப உள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ., - டிப்ளமோ - பி.இ., - பி.டெக்., - நர்சிங், பார்மசி போன்ற கல்வித் தகுதியுடைய இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பினை பெறலாம்.


 பொது மற்றும் மாற்றுத்திறனாளி மனுதாரர்கள் தங்களின் அசல் கல்விச்சான்றுகள் ஆதார் அட்டை மற்றும் சுய விபர குறிப்புகளுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog