கலை, அறிவியல் படிப்புகள்: 2.37 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு




தமிழகத்தில் கலை, அறிவியல் படிப்புகளில் சேருவதற்கான அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் (மே 19) நிறைவடையவுள்ள நிலையில் இதுவரை 2 லட்சத்து 37,985 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனா்.



தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை பொறியியல் படிப்புகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 395 இடங்கள் உள்ளன. கல்லூரி மாணவா் சோக்கைக்கான இணைய விண்ணப்பப் பதிவு கடந்த மே 8-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 2 லட்சத்து 37 ஆயிரத்து 985 மாணவா்கள் பதிவு செய்துள்ளனா்.


அதில் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 009 போ விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனா். இந்த நிலையில் விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. எனவே, விருப்பமுள்ளவா்கள் http://www.tngasa.in எனும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த மாணவா்களின் தரவரிசைப் பட்டியல் மே 23-ஆம் தேதிக்குள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். அதன்பின் சோக்கை கலந்தாய்வு (கல்லூரி அளவில்) மே 25 முதல் ஜூன் 20-ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்காக நடைபெறும். முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் ஜூன் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Comments

Popular posts from this blog