காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.!!!!!




சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக மாவட்ட தலைவர் நவநீதன் தலைமையில் தமிழக அரசு சத்துணவு பணியாளர் சங்கத்தின் மாவட்ட கிளை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இதில் மாநில செயலாளர் ராஜ்குமார், ஆலோசகர் அரியாத்தி, மாநில துணைத்தலைவர் உடையார், மாவட்ட செயலாளர் அங்காள ஈஸ்வரி, பொருளாளர் கவிதா, ஒன்றிய தலைவர்கள் சத்யன் அமுதன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜீவா ராஜாத்தி, ஜோஸ்பின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்ச்சியின் முடிவில் ஒன்றிய செயலாளர் செல்லம்மாள் நன்றி தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.


 சத்துணவு திட்டத்தில் காலை சிற்றுண்டி திட்டத்தை இணைத்து சத்துணவு பணியாளர் மூலம் செயல்படுத்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Comments

Popular posts from this blog