பி.இ., பகுதி நேர படிப்பு: விண்ணப்பிக்க அழைப்பு




பி.இ., -- பி.டெக்., பகுதி நேர படிப்புக்கு, வரும், 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.


அண்ணா பல்கலையின், சென்னை வளாக கல்லுாரிகள், திருச்சி, பண்ருட்டி ஆகிய இடங்களில் உள்ள உறுப்பு கல்லுாரிகள் ஆகியவற்றில், பி.இ., - பி.டெக்., படிப்புகள் பகுதி நேரமாக நடத்தப்படுகின்றன.வரும் கல்வியாண்டில், இந்த படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், அண்ணா பல்கலையின், http://www.cfa.annauniv.edu/cfa என்ற இணையதளத்தில், 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


அண்ணா பல்கலையில் நடத்தப்படும், எம்.எஸ்சி., படிப்பில் சேரவும், 26ம் தேதிக்குள் மேற்கண்ட இணையதளம் வழியாக பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விபரங்களை, பல்கலையின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog