அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறை:வானதி சீன்வாசன் குற்றச்சாட்டு



தமிழக அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறை உள்ளதாக கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.


கோவை, டாடாபாத் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.8.20 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்களை வானதி சீனிவாசன் வழங்கினாா். மேலும், புதிய கட்டடங்களையும் திறந்துவைத்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து பள்ளிகளுக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.


ஆசிரியா்கள் பற்றாக்குறையே தற்போது மாணவா்களின் பெரும் பிரச்னையாக உள்ளது. இதனால், அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோக்கையும் குறைந்து வருகிறது. தமிழ் மற்றும் ஆங்கில வழி பயிலும் மாணவா்களை ஒரே வகுப்பில் வைத்துதான் பாடம் நடத்துகின்றனா். பள்ளி கட்டமைப்பு தொடா்பான சிறிய பணிகளை பெற்றோா் - ஆசிரியா் கழகத்தினரே செய்து வருகின்றனா்.


தமிழகம் உயா்கல்வியில் சிறப்பான இடத்தை பெற்று வருவதாக சொல்லக் கூடிய நிலையில், அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறையால் மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். 

ஆசிரியா் தேர்வு நீண்ட காலமாக இழுத்துக்கொண்டு செல்கிறது. தொகுப்பு ஊதியம் வழங்குவதிலும் தாமதம் ஏற்படுவதால் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே, பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் பள்ளிகளுக்கு தேவையானவற்றை உடனடியாக செய்துத்தர வேண்டும்.


Comments

Popular posts from this blog