மாநிலம் முழுவதும்.. இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி.!




இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்ட உள்ளது.


தமிழகம் முழுவதும் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் இடைவெளியை மேம்படுத்த தன்னார்வலர்களை கொண்டு தினசரி ஒன்றரை மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் ” இல்லம் தேடிக் கல்வி ” மையங்கள் 38 மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது.


சிறப்பாக செயல்பட்டு வரும் இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் , மையத்தில் குறைதீர் கற்றலை கையாள வேண்டிய விதம் குறித்து ஒரு நாள் பயிற்சி மாவட்ட கருத்தாளர்களுக்கு மாநில அளவில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது ,


 இப்பறிற்சியானது தொடக்க நிலை மற்றும் உயர் தொடக்க நிலை என இரு பிரிவாக வழங்கப்படவுள்ளது. இந்த பயிற்சிக்கான மாவட்ட கருத்தாளர்களுக்கு மாநில அளவில் கீழ்கண்டவாறு பயிற்சி நடைபெறவுள்ளது.





Comments

Popular posts from this blog