பிளஸ் 1 மாணவர் சேர்க்கை ஆக.1ல் இறுதி கட்ட கலந்தாய்வு- புதுச்சேரி கல்வித்துறை 




அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ்1 சேர்க்கைக்கான இறுதி கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 1ம் தேதியும் குடியிருப்பு சான்றிதழ் இல்லாதவர்களுக்கு 2ம் தேதியும் நடக்கிறது.கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடந்து முடிந்தது.



அதில் இடம் கிடைக்காதவர்கள் மற்றும் அண்மையில் நடந்த துணைத் தேர் வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இறுதிகட்ட கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 1ம் தேதி என்.கே.சி., அரசு மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. இக்கலந்தாய்வில் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் மதிப்பெண் பட்டியல் நகர், மாற்றுச்சான்றிதழ், ஜாதி, குடியிருப்பு சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.அதில் 300 வரை மதிப்பெண் பெற்றவுர்களுக்கு 1ம் தேதி காலை 9:30 மணிக்கும், 299 முதல் 250 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு மதியம் 2:30 மணிக்கும், 249 முதல் 175 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு வரும் ஆகஸ்ட் 2ம் தேதி காலை 9:30 மணிக்கு நடைபெறும்.


 குடியிருப்பு சான்றிதழ் இல்லாதவர்களுக்கு வரும் 2ம் தேதி மாதியம் 2:30 மணிக்கு நடைபெறும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog