பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் ஜூலை 31ல் பெறலாம்…



அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை:


மார்ச்/ஏப்ரல் 2023, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) பிளஸ் 1, பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள்/ மதிப்பெண் பட்டியல் ஜூலை 31ம் தேதி முதல் வழங்கப்படும். 


பள்ளி மாணவர்கள் தாங்கள் ப்யின்ற பள்ளி வாயிலாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வாயிலாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை/ மதிப்பெண் பட்டியலினை பெற்றுக்கொள்ளலாம்.


இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog