தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக காத்திருக்கும் 66.55 லட்சம் பேர்..!




தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மற்றும் கல்லூரிப் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர்.



அவர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர்.3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவை புதுப்பிக்க வேண்டும், தவறும் பட்சத்தில் 2 மாதங்கள் சலுகைகள் வழங்கப்படுகிறது.


இந்த நிலையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் வேலைக்காக பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் பற்றிய விவரங்கள்.

ஆண்களின் எண்ணிக்கை 30,94,630

பெண்கள் எண்ணிக்கை 35,60,846

மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை 290


மொத்தம் 66,55 ,766


அதில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 16,87,537 பேர் உள்ளனர். 19 முதல் 30 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 28,53,916 பேர். 31 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் 18,51,474 பேர்.46 முதல் 60 வயது வரையுள்ள பதிவுதாரர்கள் 2,56,068 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6,771 பேர் உள்ளனர். மாற்றுத்திறனாளிகளில் 1,47, 284 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

Comments

Popular posts from this blog