அரசு கலை, அறிவியல் கல்லூரி முதுநிலை சேர்க்கைக்கு ஆக.14 முதல் விண்ணப்பம்!




அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலைப் படிப்பில் சேருவதற்கு ஆகஸ்ட்14ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை விண்ணப்பலாம் என கல்லூரி கல்வி இயக்குனர் கீதா குறிப்பு வெளியிட்டுள்ளார்.


தமிழ்நாட்டில் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலைப் படிப்புகளில் உள்ள 24 ஆயிரத்து 341 இடங்களில் சேருவதற்கு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குநர் கீதா தெரிவித்துள்ளார். 


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள முதுநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளின் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம். 


ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், கல்லூரிச் சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre - AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. மையங்கள் குறித்த விவரங்களையும் தெரிந்து கொள்ள www.tngasa.in மற்றும் www.tngasa.org முகவரியில் தெரிந்து கொள்ளலாம். 

Comments

Popular posts from this blog