ஒரு மாதத்திற்குள் எஸ்.ஐ தேர்வு முடிவுகள்!




ஒரு  மாதத்திற்குள் எஸ். ஐ. எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழக காவல் துறையில் காலியாக உள்ள உதவி ஆய்வாளா் (எஸ்.ஐ.) பணியிடங்களுக்கு கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தேர்வு நடைபெற்றது.



தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 621 உதவி காவல் ஆய்வாளா் பணியிடங்களுக்கும், தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள 129 நிலைய அதிகாரி பணியிடங்களுக்கும் தகுதியானவா்களை தேர்வு செய்யும் வகையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோவு வாரியம் சாா்பில் சில மாதங்களுக்கு முன்பு தோவு அறிவிப்பு வெளியிடப்பட்டது.


 முதல் கட்டமாக எழுத்து தேர்வு, மாநிலம் முழுவதும் 45 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. சென்னையில் இத் தோவு 6 மையங்களில் நடைபெற்றது. சனிக்கிழமை நடைபெற்ற எஸ்.ஐ. தேர்வை 1.51 லட்சம் போ எழுதினர். காவல்துறை சாா்ந்த விண்ணப்பதாரா்களுக்கு, ஞாயிற்றுக்கிழமை (ஆக.27) பிரதான எழுத்து தேர்வு நடைபெற்றது.

Comments

Popular posts from this blog