TNPSC: குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?




டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள், 8 மாதங்களைக் கடந்தும் வெளியாகாததால் தேர்வர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்.


முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதன்மைத் தேர்வு நடைபெற்றது. இதில்,55 ஆயிரத்து 71 பேர் பங்கேற்ற நிலையில், இதுவரை தேர்வு முடிவுகள் வெளியிடப் படாததால், பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருவதாக தேர்வர்கள் கூறுகின்றனர்.


5446 குரூப் 2 பணியிடங்களுக்காக நேர்முக தேர்வு மற்றும் நேர்முக தேர்வு அல்லாத பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்றது. 


அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு குரூப் 2 முதன்மை தேர்வு கடந்த பிப்ரவரி மாதத்தில் நடத்தி முடிக்கப்பட்டது 55071 ஆயிரம் தேர்வர்கள் இத் தேர்வை எழுதினர்.இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த 8 மாதங்களாக வெளியிடப்படாமல் உள்ளது.



இது குறித்து விளக்கம் அளித்துள்ள அரசு பணியாளர் தேர்வாணையம் 55 ஆயிரம் தேர்வர்களின் எழுத்து வடிவ விடைத்தாள்களையும் கணினி வழி கொண்டு திருத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. 


அதன்படி ஒவ்வொரு தேர்வரின் விடைத்தாளையும் ஒவ்வொரு கேள்விக்கான பதிலாக கணினி மூலம் இரண்டு தேர்வு மதிப்பீடாளர்கள் மதிப்பீடு செய்து வருவதாகவும், தனித்தனியாக மதிப்பீடு பணி செய்ய வேண்டியுள்ளதால் அதற்கான நாட்கள் தேவைப்படுவதால் முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை என்றும் எனவே ஏற்கனவே அறிவித்தபடி டிசம்பர் மாதத்தில் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது


இது குறித்து கருத்து தெரிவிக்கும் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தைச் சேர்ந்தவர்கள் அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு தலைவர் இதுவரை நியமிக்கப்படாமல் உள்ளதும் உறுப்பினர்கள் முழுவதும் நியமிக்கப்படாமல் இருப்பதும் அரசு பணியாளர் தேர்வாணைய பணிகளில் சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.


மேலும் தற்போது விடைத்தாள் மதிப்பீட்டில் பணியில் உள்ள மதிப்பீட்டாளர்களின் எண்ணிக்கையை உயர்த வேண்டும் என்பதும் கோரிக்கையாக உள்ளது.



முடிவுகள் தாமதமாவது குறித்து கருத்து தெரிவிக்கும் போட்டி தேர்வு எழுதும் மாணவர்கள் ஒவ்வொரு தேர்விற்கும் மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை காத்திருக்கும் நிலை உள்ளதாகவும் இதனால் மன உளைச்சல் ஏற்படுத்துவதுடன் பொருளாதார நெருக்கடிகளையும் சந்திப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.


குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் கடந்த எட்டு மாதங்களாக வெளியாகாமல் இருப்பது குறித்து விளக்கம் அளித்துள்ள அரசு பணியாளர் தேர்வாணையம் வெளிப்படை தன்மையுடனும்,எவ்வித தவறுகளுக்கும் இடமளிக்காத வகையில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஏற்கனவே அறிவித்துள்ளபடி டிசம்பர் மாதம் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் டி என் பி எஸ் சி தெரிவித்துள்ளது

Comments

Popular posts from this blog