புதுச்சேரி நவோதயா பள்ளி அட்மிஷன்; விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு



புதுச்சேரி ஜவகர் நவோதயா பள்ளி முதல்வர் கண்ணதாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி, பெரியகாலாப்பட்டில் மத்திய அரசு கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ஜவகர் நவோதயா வித்யாலயாவில் 9 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பில் (அறிவியல் மற்றும் வணிகவியல் பிரிவுகள்) உள்ள காலி இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் தெரிவுநிலைத் தேர்வில் அடிப்படையில் சேருவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அக்.31 என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நவம்பர் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 


எனவே இதுவரை விண்ணப்பிக்காத விண்ணப்பதாரர்களின் பெற்றோர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog