ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட்.! TNPSC முக்கிய அறிவிப்பு.!




அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு நவம்பர் 19-ம் தேதி எழுத்து தேர்வு நடைபெறவுள்ளது.



இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் நேரடி நியமனம் மூலம் ஓட்டுனர், நடத்துனர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்த நபர்களுக்கு தமிழகம் முழுவதும் 10 மையங்களில், வரும் நவம்பர் 19-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது.


இதற்கான அனுமதிச் சீட்டை இன்று முதல் www.tnstc.in எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்பித்த நபர்களுக்கு தேர்வுக்கான அனுமதிச் சீட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் தபாலில் அனுப்பிவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog