TNPSC Group1 || 90 பணியிடங்களுக்கான தேர்வு தேதியை அறிவிப்பு.!!



தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் குரூப்-1 தேர்வுக்கான கால அட்டவணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.



அதன்படி தமிழ்நாடு அரசின் கீழ் காலியாக உள்ள துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், துணை ஆணையர், இணை பதிவாளர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக அதிகாரி உள்ளிட்ட 90 பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 


அதில் 16 துணை ஆட்சியர்கள் 23 துணை காவல் கண்காணிப்பாளர்கள் பதவிகள் அடங்கும். 21 வயது முதல் அதிகபட்சம் 39 வயது உடைய தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். இன்று முதல் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். 


இந்த காலி பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு வரும் ஜூலை 13ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வு முடிவு வெளியான பிறகு முதன்மை தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://www.tnpsc.gov.in/Document/english/04_2024_GRP1_ENG_.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.


Comments

Popular posts from this blog