'டெட்' தேர்வு அறிவிப்பு எப்போது? - ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு



பட்டதாரிகள் மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.


மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் 'டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


 தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் ( என்சிடிஇ ) விதிமுறைகளின் படி, ஆண்டுக்கு 2 தடவை 'டெட்' தேர்வு நடத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் இந்தத் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.


2024-ம் ஆண்டு 'டெட்' தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரலில் வெளியிடப்பட்டு ஜூலையில் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுகால அட்டவணையில் அறிவித்திருந்தது. 


இந்நிலையில், ஏப்ரல் மாதம் முடிவடைய உள்ள நிலையில் 'டெட்' தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் வெளியிடவில்லை. இதனால், 'டெட்' தேர்வை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பி.எட். பட்டதாரிகளும், இடைநிலை ஆசிரியர் பயிற்சியை முடித்தவர்களும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.


இது குறித்து ஆசிரியர்கள் கூறும்போது, சி-டெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு என்சிடிஇ விதிமுறையைப் பின்பற்றி ஆண்டுக்கு 2 தடவை நடத்தப்படுகிறது. 


அதேபோல், ஆசிரியர் தேர்வு வாரியமும் ஆண்டுக்கு 2 தடவை 'டெட்' தேர்வை நடத்த வேண்டும். இப்போது தனியார் சுயநிதி பள்ளிகளில் கூட 'டெட்' தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களைத் தான் பணிக்கு தேர்வு செய்கிறார்கள்.


அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் இடைநிலை ஆசிரியர் பதவிக்கான போட்டித் தேர்வை எழுத 'டெட்' தேர்ச்சி அவசியம். எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம் 'டெட்' தேர்வுக்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட்டு விரைந்து தேர்வு நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டும் என்றனர்.

Comments

Popular posts from this blog