TNPSC குரூப் 1 தேர்வுக்கு அப்ளை பண்ணியாச்சா? இன்னும் 1 வாரம் தான் இருக்கு!




தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தேர்வு மூலம் நிரப்பவதற்கான குரூப் 1 தேர்வு (Group 1) அறிவிக்கையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இன்று வெளியிட்டுள்ளது.


காலியிடங்கள்:


துணை ஆட்சியர்

துணைக் கண்காணிப்பாளர் (வகை-1)

உதவி ஆணையர் (வணிக வரி)

கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர்

ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்

மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அலுவலர்

உள்ளிட்ட 7 பதவிகளுக்கான 90 காலியியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அதற்கான விண்ணப்பங்கள் (28-03-2024 )இன்று முதல் தொடங்குகிறது. விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியே மட்டுமே அனுப்பப்பட வேண்டும். இதற்காக விண்ணப்பிக்க , https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பத்தார்களுக்கான அறிவுறுத்தல்களை நன்றாக படித்து , தேர்வுக்கான அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்கிறோம் என உறுதி செய்த பின்னர் விண்ணப்பிக்கவும்.

வயது:


இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் மற்றும் 34 வயது க்கு மேல் இருக்க கூடாது. ஒதுக்கப்பட்ட பிரிவுகளுக்கான அரசின் வயது வரம்பு தளர்வுகள் பொருந்தும்.

கல்வித் தகுதி:


டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எழுத குறைந்தபட்சம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பதவிகளுக்கு ஏற்ப கல்வித் தகுதிகள் மாறுபடும். அதை அதிகாரபூர்வ அறிக்கையில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

முக்கியமான நாட்கள்:


விண்ணப்பங்கள் சமர்ப்பித்தற்கான கடைசி தேதி: 27.04.2024 11.59 P.M

விண்ணப்பத் திருத்தும் காலம்: 02.05.2024 12.01 A.M முதல் 04.05.2024 11.59 P.M

தேர்வு நாள் : 13.07.2024 காலை 09.30 மணி முதல் மதியம் 12.30 வரை

விண்ணப்பிக்கும் முறை


ஒருமுறைப் பதிவு மற்றும் இணைய வழி விண்ணப்பம் https://www.tnpsc.gov.in/ அல்லது www.tnpscexams.in என்ற இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தேர்வர்கள் தேர்வாணைய இணையத் தளத்தில் உள்ள ஒருமுறைப் பதிவு தளத்தில் பதிவு செய்த பின்பு இத்தேர்விற்கான விண்ணப்பத்தினை நிரப்ப வேண்டும். தேர்வர் ஏற்கனவே ஒருமுறைப்பதிவில் பதிவு செய்திருப்பின், அவர்கள் இத்தேர்விற்கான இணையவழி விண்ணப்பத்தை நேரடியாக பூர்த்தி செய்யத் தொடங்கலாம்

தேர்வு முறை:


ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு - I (குரூப்-I சர்வீசஸ்) இரண்டு தொடர்ச்சியான நிலைகளைக் கொண்டுள்ளது:

(i) முதன்மைத் தேர்வுக்கான விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான முதல்நிலைத் தேர்வு (அப்ஜெக்டிவ் வகை); மற்றும்

(ii) பல்வேறு பதவிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான முதன்மைத் தேர்வு (எழுத்து மற்றும் நேர்காணல்) இருக்கும்.


இந்தத் தேர்வுகளில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ தேர்வுகள் அமையும் பின்னர், சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு நியமிக்கப்படுவர். முழு விபரங்களுக்கு டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையை பார்க்கவும்.

Comments

Popular posts from this blog