கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுபாட்டில் செயல்படும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமன்ம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 2,000 உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணியிடங்களுக்கு தொடக்கமே ரூ.23,640 முதல் தொடங்கி அதிகபடியாக ரூ.96,395 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக இப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் விவரங்கள்
கூட்டுறவு வங்கி, கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, நகர கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு கடன் சங்கம், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்களில் உள்ள உதவியாளர்/ இளநிலை உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க 01.07..2025 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அதாவது 01.07.2007 அன்றோ அதற்கு முன்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும்.
அதிகபடியாக ஒசி பிரிவினர் 32 வயது வரையும், ஒசி பிரிவு முன்னாள் ராணுவத்தினர் 50 வயது வரையும், ஒசி பிரிவு மாற்றுத்திறனாளிகள் 42 வயது வரையும் இருக்கலாம். எஸ்சி/எஸ்டி, பிசி, எம்பிசி பிரிவினர் மற்றும் அதில் சிறப்பு பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. அதே போன்று, அனைத்து இனைத்தைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு கிடையாது.
கல்வித்தகுதி
கூட்டுறவு சங்க உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 10+2+3 என்ற முறையில் டிகிரி தகுதியை பெற்றிருக்க வேண்டும் மேலும், கூட்டுறவுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
கூட்டுறவு பயிற்சிகளாக கருதப்படுபவை
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் வழங்கப்படும் கூட்டுறவு மேனேஜ்மெண்ட் டிப்ளமோ (Diploma in Cooperative
Management).
சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம் நடத்தப்படும் உயர் கூட்டுறவு மேனேஜ்மெண்ட் உயர் டிப்ளமோ ( Higher Diploma in Cooperative Management).
கூட்டுறவு சாரந்த டிகிரி முடித்தவர்கள் கூட்டுறவு பயிற்சி தகுதியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
விண்ணப்பதார்கள் பள்ளி படிப்பு அல்லது கல்லூரி படிப்பில் தமிழ் மொழியை ஒரு பாடமாக படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருந்த்தல் வேண்டும்.
என்னென்ன டிகிரி பெற்றவர்களுக்கு விலக்கு உண்டு
பி.காம் (ஆனர்ஸ்) கூட்டுறவு
எம்.காம் (கூட்டுறவு)
எம்.ஏ (கூட்டுறவு)
பி.ஏ (கூட்டுறவு)
பி.காம் (கூட்டுறவு)
வைகுந்த மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம், புனே வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை (கூட்டுறவு) பட்டம்.
கூட்டுறவில் முதுநிலை பட்டப்படிப்பு.
நிபந்தனை : கூட்டுறவு பாடப்பிரிவில் பி.ஏ, பி.காம் படித்து கூட்டுறவுப் பயிற்சிலிருந்து விலக்கு கோருபவர்கள், Book Keeping, Banking, Cooperation, Auditing ஆகிய பாடங்களைப் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இல்லையென்றால் கூட்டுறவுப் பயிற்சி கட்டாயமாகும்.
சம்பள விவரம்
உதவியாளர் பதவியில் சங்கங்கள் அல்லது வங்கி பணியிடத்திற்கு ஏற்ப சம்பளம் மாறுப்படும். இப்பதவிக்கு அடிப்படை ரூ.23,640 முதல் அதிகபடியாக ரூ.96,395 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
கூட்டுறவு சங்க பணியிடங்களுக்கு விண்ணப்பதார்களில் தகுதியானவர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு முறையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு பட்டப்படிப்பு தரத்தில் 200 கேள்விகளுடன் 170 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். ஆங்கிலம் மற்றும் தமிழில் தேர்வு நடைபெறும்.
இதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இடஒதுக்கீட்டை சார்ந்து தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்பு பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்னப்பிக்க விரும்பும் நபர்கள் அந்நந்த மாவட்டத்தில் மாவட்ட ஆட்சேர்ப்பு பணியகம் (DISTRICT RECRUITMENT BUREAU-2025) மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். கூகுளில் District Recruitment Bureau உடன் மாவட்ட பெயரை உள்ளிட்டு தேடவும்.
உதாரணத்திற்கு சென்னை மாவட்ட பணியிடங்களுக்கு https://www.drbchn.in/ என்ற இணையதளத்திலும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு https://drbkpm.in/ என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், அனைத்து பிரிவு ஆதரவற்ற விதவைகள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும்.
முக்கிய நாட்கள்
விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள் 06.08.2025
விண்ணப்பிக்க கடைசி நாள் 29.08.2025 மாலை 5.45 மணி வரை
தேர்வு தேதி 11.10.2025 காலை 10 மணி முதல் 1 மணி வரை
தேர்விற்கான பாடத்திட்டம் அந்தந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Comments
Post a Comment