Posts

Image
  ஆசிரியர் தகுதி தேர்வு (tet )விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது.  மாண்புமிகு சபாநாயகர் அவர்களே , ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பிற்காக சட்டமன்றத்தின் தலையீடு அவசியம் என்பதை உங்கள் வாயிலாக இந்த சபையின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். லட்சக்கணக்கான ஆசிரியர்களின் சேவைப் பாதுகாப்பும் வாழ்வாதாரமும் தொடர்புடைய மிகவும் தீவிரமான விவகாரம் இது. உயர்நீதிமன்ற தீர்ப்பின் தாக்கம்: மாண்புமிகு உயர் நீதிமன்றம், செப்டம்பர் 2025 அன்று வழங்கிய தீர்ப்பில், முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும், அவர்கள் எப்போது நியமிக்கப்பட்டிருந்தாலும், ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆபத்தில் உள்ள ஆசிரியர்கள்: இந்தத் தீர்ப்பின் காரணமாக, மாநிலம் மட்டுமல்ல, நாடு முழுவதிலும் உள்ள சுமார் 20 லட்சம் ஆசிரியர்களின் 'தகுதியானவர்' மற்றும் 'விலக்கு (exempted)' என்ற அந்தஸ்து கேள்விக்குறியாகியுள்ளது. சட்ட அமலாக்க வேறுபாடுகள் : தலைவர் அவர்களே, கல்வி உரிமைச் சட்டமும் TET கட்டாயமும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் வேறு வேறு தேதிகளில் அமலுக்கு...
Image
  டிஎன்பிஎஸ்சி 2026.. குரூப் தேர்வுகள் கால அட்டவணை எப்போது? விரைவில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது. தேர்வர்கள் தேர்வுகளுக்கு முன்கூட்டியே தயாராகும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டிலேயே என்னென்ன தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பதை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி ஆண்டு தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு பணிகளுக்கு தேர்வாகி வரும் பல லட்சக்கணக்கான தேர்வர்களுக்கு கலங்கரை விளக்கமாக இருப்பது டிஎன்பிஎஸ்சிதான். நன்றாக படித்து போட்டித்தேர்வில் வெற்றி பெற்றால் போதும். வேலை நிச்சயம்.. 10 பைசா பணம் தர தேவையில்லை. டிஎன்பிஎஸ்சி ஆண்டு தேர்வு அட்டவணை படித்து வெற்றி பெற்றால் அரசு வேலை 100 சதவீதம் உறுதி என்பதால், கிராமப்புற ஏழை எளிய தேர்வர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பை உறுதி செய்வது தமிழக அரசு பணியாளர் தேர்வு ஆணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சிதான். டிஎன்பிஎஸ்சியை பொறுத்தவரை குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நில...
Image
  முதுநிலை ஆசிரியர் தேர்வில் அதிர்ச்சி..!! தமிழ் பாடத்தில் 85,000 பேர் தோல்வி..!! 20 மதிப்பெண் கூட வாங்கல..!! தமிழக அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், மற்றும் கணினி பயிற்றுநர் ஆகிய 1,996 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த அக்டோபர் 12ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை 2.36 லட்சம் முதுநிலை பட்டதாரிகள் எழுதினர்.  நேற்று (நவம்பர் 29) வெளியான தேர்வு முடிவுகள், தமிழகக் கல்வித் தரம் குறித்துக் கவலையளிக்கும் ஒரு அதிர்ச்சித் தகவலை வெளிப்படுத்தியுள்ளன. தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் சேரும் நபர்களுக்குத் தமிழ் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்பதை உறுதிசெய்யும் நோக்கில், கடந்த 2022ஆம் ஆண்டு முதல் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.  இந்தத் தேர்வில் மொத்தமுள்ள 50 மதிப்பெண்களில், 20 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும். தமிழில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, விண்ணப்பதாரரின் பிரதானப் பாடம் சார்ந்த விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற விதி உள்ளது...
Image
  CTET 2026 தேர்வு விண்ணப்பம் தொடக்கம்; விண்ணப்பிக்க முழு விவரம் சிபிஎஸ்இ நடத்தும் சிடெட் தேர்வு (CTET) 2026 வரும் பிப்ரவரி 8-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இத்தேர்விற்கான ஆன்லைன் விண்ணப்பம் தற்போது தொடங்கியுள்ளது. ஆசிரியர் தகுதிப் பெற விரும்புகிறவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொண்டு விண்ணப்பிக்கலாம். மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு 2026 இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆசிரியராக பணியாற்ற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும். அந்த வகையில், மாநிலங்களில் அளவில் டெட் (TET) தேர்வும், மத்திய அரசு பள்ளிகளுக்கு சிடெட் (CTET) தேர்வும் நடத்தப்படுகிறது. சிடெட் தேர்வை சிபிஎஸ்இ நடத்தி வருகிறது. CTET தேர்விற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? சிடெட் முதல் தாள் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க ஆசிரியர்களுக்காக நடத்தப்படுகிறது. அதே போன்று, இரண்டாம் தாள் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை கற்பிக்க உள்ள ஆசிரியர்களுக்கு ஆகும். முதல் தாளை 2 வருட டிப்ளமோ, 4 வருட B.El.Ed, 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு மற்றும் B.Ed மு...
Image
  PG TRB Results: ஷாக்... பி.ஜி டி.ஆர்.பி தேர்வில் தமிழில் மட்டும் 80,000 பேர் ஃபெயில்; இது எப்படி நடந்தது? ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான (PGTRB) தேர்வு முடிவுகளை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மொத்தம் 1996 காலிப்பணியிடங்களுக்காக கடந்த அக். 12 அன்று நடைபெற்ற இத்தேர்வை, தமிழ்நாடு முழுவதும் உள்ள 809 மையங்களில் 2,20,412 தேர்வர்கள் எழுதினர். CV பட்டியல் வெளியீடு: அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் 1:1.25 என்ற விகிதத்தில் தேர்ச்சிப் பட்டியல் (Shortlist) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு (CV) நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்புக் கடிதத்தை (Call Letter) டிஆர்பி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். தபால் மூலம் அழைப்புக் கடிதம் அனுப்பப்படாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. தமிழ் தகுதித் தேர்வில் 84,000 பேர் தோல்வி மறுபுறம் பிஜி டிஆர்பி தேர்வில், தமிழ் தகுதித் தேர்வில் (Tamil Eligibility Test) மட்டும் சுமார் 84,000 பேர் தோல்வியடைந்த அதிர்ச்சி...
Image
  முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு. 1996 காலிப்பணியிடங்களுக்கான  முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 10.07.2025 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் கடந்த அக்டோபர் மாதம் 12ம் தேதி தேர்வுகள் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து  தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் மற்றும் இனச் சுழற்சி அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் பாடவாரியாக ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்  வெளியாகியது. சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்பு கடிதம், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்வதற்கான வழிமுறைகள் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதம் பிற வழிகளில் அனுப்பி வைக்கப்படமாட்டாது எனவும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான இடம் மற்றும் தேதி ஆகியவை சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்புக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்புக் கட...
Image
  TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்! நாடு முழுவதும் இலட்சக்கணக்கான ஆசிரியர்களை, குறிப்பாக தமிழ்நாட்டில் கணிசமான எண்ணிக்கையிலான ஆசிரியர்களை பாதிக்கும் அவசரமான மற்றும் முக்கியமான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின்ஆதரவைக் கோரி இன்று (25-11-2025) கடிதம் எழுதியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம், 2009 (The RTE Act, 2009) பிரிவு 23 மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக் குழும சட்டம், 1993 (NCTE Act 1993), பிரிவு 12A-ல் உரிய திருத்தங்கள் மேற்கொண்டு, ஆசிரியர்களைப் பாதுகாப்பதுடன், பதவி உயர்வுகளுக்கு தகுதி உடையவர்களாக இருப்பதையும், குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதிசெய்திட வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.    முதலமைச்சர் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், சிவில் மேல்முறையீடு எண் 1405/2025, 1385/2025 மற்றும் 1386/2025 மற்றும் பிற வழக்குகளில் 01.09.2025 அன்று  உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட சமீபத்...