Posts

Image
  காலிப்பணியிடங்களை நிரப்பாமல் தற்காலிக ஊழியர்களை வைத்து அரசு நிர்வாகத்தை நடத்த திட்டமா?- டிடிவி தினகரன் தமிழக அரசுப் பணிகளில் இருந்து இன்று ஒரே நாளில் 8,144 ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். காலிப்பணியிடங்களை நிரப்பாமல் தற்காலிக ஊழியர்களையும், ஆலோசகர்களையும் வைத்தே அரசு நிர்வாகத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறதா திமுக அரசு?என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசின் குரூப் ஏ, குரூப் பி, குரூப் டி உள்ளிட்ட பணியிடங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 144 அரசுப் பணியாளர்கள் இன்று ஒரே நாளில் ஓய்வுபெறுவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள 3.5 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும், ஆண்டுதோறும் பத்து லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்தும், அந்த வாக்குறுதியில் 25 சதவிகிதத்தை கூட நிறைவேற்றவில்லை என்பதற்கு அரசுத்துறைகளில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையே சாட்சியாக அமைந்திருக்கிறது. ஒவ்...
Image
  அரசுப்பணியில் ஆண்டுக்கு 50,000 பேர் ஓய்வு.. 5 வருஷத்துல எத்தனை பேரை வேலைக்கு எடுத்து இருக்கீங்க..? - தமிழக அரசை சாடும் அன்புமணி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களில் 8144 பேர் இன்று ஒரே நாளில் ஓய்வு பெறுகின்றனர். மே மாத இறுதியில் அரசு ஊழியர்கள் அதிக எண்ணிக்கையில் ஓய்வு பெறுவது இயல்பானது தான். ஆனால், அவ்வாறு ஓய்வு பெறும் அரசு ஊழியர்களால் ஏற்படும் காலி இடங்களை நிரப்ப தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது தான் கண்டிக்கத்தக்கது ஆகும். ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் ஆண்டில் இடையில் ஓய்வு பெற்றாலும் அவர்களுக்கு மே மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்கப்படும் என்பதால், மே மாத இறுதியில் ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். மற்ற மாதங்களில் சராசரியாக 4 ஆயிரம் பேர் ஓய்வு பெறுவதாக வைத்துக் கொண்டாலும் ஆண்டுக்கு ஒட்டுமொத்தமாக 50 ஆயிரம் பேர் அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார்கள். ஆனால், அந்த இடங்களை நிரப்பத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறதா? என்பது தான் வினா ஆகும். ஆனால், அதற்கான பதில் காலியிடங்கள் நிரப்பப்படவில்ல...
Image
  டிஎன்பிஎஸ்சி தேர்வு விடைத்தாளில் புதிய மாற்றம் - வரும் ஜூன் மாதம் முதல் அமல்..! டின்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், OMR விடைத்தாளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரிப் படிவமானது OMR Answer Sheet - Sample" எனும் தலைப்பில் தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. தேர்வர்கள் 4 இலக்க வினாத்தொகுப்பு எண்ணை அதற்குரிய வட்டங்களில் கருமை நிற பந்துமுனை பேனாவைப் பயன்படுத்தி கருமையாக்க வேண்டுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், OMR விடைத்தாளின் பக்கம்-1 பகுதி-II-இல், தேர்வர்கள் உறுதிமொழி அளித்து, கையொப்பமிட வேண்டும். மேலும், தேர்வாணையத்தால் நடத்தப்படவிருக்கும் இனிவரும் அனைத்து OMR முறை தேர்வுகளிலும் பங்கேற்க உள்ள தேர்வர்கள், புதிய மாதிரி OMR விடைத்தாளினை நன்கு பார்த்து அறிந்து கொண்டு தேர்வு எழுதுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், 2025-ம் ஆண்டுக்கான முதல் தேர்வாக குருப் 1 தேர்வி வரும் ஜூன் 15-ம் தேதி நடைபெற உள்ளது. அத்தேர்வில் இருந்து புதிய OMR தாள் பயன்படுத்தப்பட உள்ளது....
Image
  சத்துணவு மையங்களில் 63,000 காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி வலியுறுத்தல் தமிழகத்தில் காலியாக உள்ள 63 ஆயிரம் சத்துணவுப் பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி கூறினார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 16-வது மாநில மாநாடு திண்டுக்கல்லில் நடைபெற்றது. மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் சுகந்தி வரவேற்றார். இதில் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி பேசியதாவது: மிகக் குறைந்த ஊதியத்தில் பணி செய்யக்கூடிய சத்துணவு ஊழியர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு ஊழியர்களுக்கும், காலமுறை ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான வரி போடுவோம் என்கிறது அரசு. இதில்தான் உழைப்புச் சுரண்டல் இருக்கிறது. காலியாக உள்ள 63 ஆயிரம் சத்துணவுப் பணியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், பகுதி நேர சத்துணவுப் பணியாளர்களை முழு நேர ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு குடும்ப நிதியாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஒட்டுமொத்த பணிக்கொடையாக ச...
 "ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்''- தொடக்கக்கல்வி இயக்குனர் பள்ளி திறப்பில் மாற்றம் இல்லை, ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, மாநிலப் பாடத்திட்டப் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு இன்னும் 10 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பள்ளி திறப்பில் மாற்றம் இல்லை என தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.  ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், அரசு, அரசு நிதி உதவி பெறும் ஆரம்பம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறப்பதற்கு தயாராக வேண்டும் எனவும் தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.
Image
  வயது வரம்பு தளர்வு, இடஒதுக்கீடு கோரிக்கை; போட்டித் தேர்வர்கள் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் டி.என்.பி.எஸ்.சி-யால் நடத்தப்படும் குரூப்-1 தேர்வு வயது உச்சவரம்பை மற்ற 12 மாநிலங்களில் உள்ளது போல 49 வயது வரை உயர்த்த வேண்டும்; வெளிப்படைத்தன்மையுடன் டி.என்.பி.எஸ்.சி.செயல்பட வேண்டும்; தமிழ் வழியில் முதன்மைத் தேர்வு எழுதுபவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு 20% வழங்க வேண்டும். தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும். முதன்மை (மெயின்ஸ்) தேர்வு மதிப்பீட்டினை நியாயமான முறையில் வழங்க வேண்டும்; ஆங்கில விடையே இறுதியானது என்பதை மாற்றி தமிழ் விடைகளே இறுதியானது என மாற்றி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துப்போட்டி தேர்வு அமைப்பு சார்பில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில், இந்த அமைப்பின் தலைவர் கலீல்பாஷா, செயலாளர்உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது, தமிழ்நாடு அனைத்துப் போட்டி தேர்வு மாணவர் அமைப்பு தலைவர் கலீல்பாஷா கூறியதாவது: டிஎன்பிஎஸ்சி குரூப் -2 ஏ தேர்வு முடிவு கடந்த சனிக்கிழ...
Image
  பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...